இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த மாநாட்டில் பிரித்தானியா பங்குபற்றுவது தொடர்பில் தற்போதைக்கு கூறமுடியாது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளைப் போன்றே இலங்கை விவகாரத்திலும் பிரித்தானியா செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனித உரிமை, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய பண்புகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பின்பற்றுகின்றது என்பதனை பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கண்காணிக்கும்.
அத்துடன் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்பாடு காணப்படாது விடின் பொது நலவாய நாடுகளின் அமர்வில் கலந்து கொள்வது குறித்து மீள் பரிசீலனை செய்ய நேரிடும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதகுரு தீக்குளிப்பு நாட்டில் மிருகங்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக தெரிவித்த பெத்த மதகுரு தன்னைத்தானே தீயிட்டு
தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால்
இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோ முறையில் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையர் கைது சட்ட விரோதமான முறையில் ஆட் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் கைது செய்யப்பட்ட இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கருணாநிதி நல்லதம்பி என தெரியந்துள்ளது.
இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றச்சாட்டியுள்ளார். மேலும்...
அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்...
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்...
நாட்டில் மிருகங்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக தெரிவித்த பெத்த மதகுரு தன்னைத்தானே தீயிட்டு
தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால்
இடம்பெற்றுள்ளது. மேலும்...
யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம். மேலும்...
யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. மேலும்...
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மேலும்...
சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது. மேலும்...
சென்னையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும்...
அப்பாவுக்காக காலிமுகத்திடல் காத்துக் கொண்டிருந்தது. செந்நிறச் சால்வையை வழக்கம் போல கழுத்தில் போட்டுக் கொண்டு தன் மூன்று புத்திரர்கள் சகிதம் மேடையில் ஏறியமர்ந்தார். மேலும்...
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. மேலும்...